K U M U D A M   N E W S

"போதைப்பொருள் பயன்படுத்திய அமைச்சர் சரத்..." உதயநிதியால் டென்ஷனான த.வெ.க.

சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க - திமுக இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.

உதய்யின் கவன ஈர்ப்பு தீர்மானம்: திங்கட்கிழமைக்கு மாற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டப்பின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கோவையில் போதை கும்பல் குறித்து புகாரளித்த கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கான கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்தார். அந்த தீர்மானத்தை சட்டப்பேரவைத் தலைவர் வரும் திங்கட்கிழமையன்று விவாதிக்கப்படும் என்று மாற்றி வைத்தார்.