K U M U D A M   N E W S

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்... 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்... ராஜ்நாத் சிங் இரங்கல்!

கதுவா மாவட்டம் மட்டுமின்றி குல்காம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து 24 மணி நேரத்துக்கும் மேலாக பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

“2026ல் விஜய் தான் முதலமைச்சர்... 5,000, 10,000 கோடி..?” தவெக நிர்வாகிகளை அலறவிட்ட புஸ்ஸி ஆனந்த்

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தான் முதலமைச்சர் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியதை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்... பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்!

கனமழை-வெள்ளத்தில் சிக்கி இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு படையினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது... தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை சுட்டிக்காட்டியும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்தும் பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீது நம்பிக்கை இல்லை - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து பிரேமலதா விளக்கம்

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை அதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் வாக்களிக்காமல் புறக்கணிப்பார்கள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி வருவதற்கு ராகுல்காந்திக்கு வழி தெரியவில்லை - எல்.முருகன் தாக்கு

2047ஆம் ஆண்டில் இந்தியாவை உலகத்திற்கு வழிகாட்டவும், வல்லரசாகவும் மாற்ற பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் செயல்பட்டு வருகிறார்.

அடேங்கப்பா.. இத்தனை பேர்களா? இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியினர்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பிரதமரும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருமான ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார். ஸ்டார்மர் புதிய பிரதமராக அடுத்த வாரம் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 20 ஆண்டுகளில் இது தொழிலாளர் கட்சிக்கு சிறந்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

மணிப்பூர்… மணிப்பூர்.. என முழங்கிய எதிர்க் கட்சியினர்… தொடர்ந்து உரை நிகழ்த்திய பிரதமர் மோடி!

மக்களவையில் எதிர்க் கட்சியினரின் தொடர் முழுக்கங்களுக்கு இடையே பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

'மோடியின் உலகத்தில் உண்மையை அகற்றலாம்... ஆனால் நிஜ உலகில்...?'... ராகுல் காந்தி அதிரடி!

மக்களவையில் ராகுல் காந்தி பேசிய சில கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக ராகுல் காந்தியின் இந்து மதம் குறித்த பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சம்பவம் செய்த ராகுல் காந்தி... அதிர்ந்த பாஜக எம்.பி.க்கள்... இன்று பதில் அளிக்கிறார் பிரதமர் மோடி!

நேற்று ராகுல் காந்தி பேசியபோது பிரதமர் மோடி உள்பட பாஜகவினர் 8க்கும் மேற்பட்ட முறை குறுக்கீடு செய்தனர். ராகுலின் இந்து மதம் குறித்து பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.